tag:blogger.com,1999:blog-194762182024-03-07T18:49:30.358-08:00சுவைக்கச் சுவைக்கசுவைக்கச் சுவைக்கச் சிறந்த சமையல் குறிப்புகள். சுவைத்துப் பாருங்களேன்.G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-19476218.post-84558495388284306382007-08-18T14:12:00.000-07:002008-12-11T04:11:24.154-08:009. குடைமிளகாய் இறால்"எறால் வாங்கீட்டு வந்திருக்கேன். என்ன செய்றதுன்னு தெரியலை" என்று கூடத் தங்கியிருக்கும் அலுவலக நண்பன் சொன்னப்போ, "சரி நாஞ் செய்றேன்"ன்னு சொல்லீட்டேன். எறால் நமக்கென்ன புதுசா? எவ்வளவு பாத்திருக்க மாட்டோம். நம்மூர்ல ஓடு உரிக்காமக் கெடைக்கும். அதையும் பதமா மண்டையப் பிச்சி ஓட்ட உரிச்சிருக்கோமே. அவ்வளவு எக்ஸ்பர்ட்டு. அப்படியிருக்குறப்போ நெதர்லாந்துல நல்ல தண்டித்தண்டி எறாலக் கெடச்சா சும்மா விடுவோமா?<br /><br />பெரிய வெங்காயத்த எடுத்து நீளமா நறுக்கிக்கனும். பொடிப்பொடியா நறுக்கீறக்கூடாது. அப்புறம் நஞ்சு போயிரும். அடுத்தது தக்காளீன்னுதான நெனச்சீங்க. அதுதான் இல்ல. எறால்ல தக்காளி போட்டாலும் நல்லாத்தான் இருக்கும். ஆனா கொழகொழன்னு வெஞ்சனமா ஆயிரும். அதுக்கு மாத்தாத்தான் கொடமெளகா. நம்மூர்ல பச்சையா இருக்கும். இங்க செவப்பு மஞ்சளுன்னு கெடைக்குது. எதுவும் போடலாம். மலையாளத்துல எறாலுக்குச் செம்மீன்னு பேரு. அதுனால நான் செவப்புக் கொடமெளகாய எடுத்துக்கிட்டேன். நல்லா சின்னச் சின்னதா நறுக்கிக்கிறனும். வேற என்ன? வேற ஒன்னுமில்ல. அவ்வளவுதான்.<br /><br />எறாலக் கழுவி எடுத்துக்கிருங்க. சட்டியக் காயவெச்சு எண்ணய ஊத்துங்க. அடுத்து என்ன செய்யனும்? கடுகு உளுந்தம் பருப்புதான? ஆனா போடக்கூடாது. கத்திரிக்கா வதக்கலா செய்யப் போறோம்! இது எறால். அதுனால எண்ண காஞ்சதும் வெங்காயத்தையும் கொடமெளகாயையும் ஒன்னாப் போட்டுறனும். போட்டு ரெண்டு கிண்டு கிண்டி வதக்கனும்.<br /><br />எளம் வதக்கலா இருக்குறப்பவே எறாலையும் கூடப் போட்டுறனும். இதுல பாருங்க மஞ்சப்பொடியெல்லாம் போடக் கூடாது. ஏன்னா...என்னென்ன சேத்துருக்கமோ அதது அந்தந்த நெறத்துல அப்படியே தெரியனும். அங்கதான் இருக்கு சூக்குமம். வெங்காயம் கொடமெளகாயோட எறாலையுஞ் சேத்துப் பெரட்டனும். சொட்டுச் சொட்டாக் கூடத் தண்ணி ஊத்தக் கூடாது.<br /><br />இதுல இன்னொன்னையும் கவனிக்கனும். அடுப்பு மெதம்ம்ம எரியனும். தபதபன்னு எரியவிட்டா எறா சுறாவாயிரும். மெதமா எரியும் போது மூனையும் லேசாப் பெரட்டிக்கனும். அது கூட வேண்டிய அளவுக்கு மெளகாப்பொடியும் உப்பும் மட்டும் போட்டுப் பெரட்டனும்.<br /><br />எறாலுக்குன்னு ஒரு சுவையிருக்கு. மணமிருக்கு. மசாலாப்பொடிகள எக்கச்சக்கமா கலந்துட்டா அது தெரியாது. மசால நெறையத் திங்கனும்னா எறா எதுக்கு? ரெண்டு உருளைக் கெழங்கப் போட்டாப் போதாது. ஆலு லபக்தாஸ் ஆயிரலாம்ல. ஆகையால மசாலாக்களைக் கொறச்சிக்கோங்க. மெளகாப்பொடியும் உப்பும் மட்டும் போதும். ரொம்பவும் விரும்புனீங்கன்னா லேசா கரம் மசாலா போட்டுக்கோங்க. என்னையக் கேட்டா அதுவும் வேண்டாம்பேன்.<br /><br />ஆக...வெங்காயம்+கொடமெளகா, எறால், மெளகாப் பொடி, உப்பு...அப்படி வரிசையாப் போட்டு பெரட்டீருக்கோம். மெதமான நெருப்பு. இப்ப தானா தண்ணி ஊறும். எறால்லயும் மெளகாய்லயும் இருக்குற தண்ணி தானா வெளிய வரும். அந்தத் தண்ணீல எறா வேகனும். அப்ப ஒரு மணம் கெளம்பும் பாருங்க. ஆகா!<br /><br />வங்காளத்துல அந்தக்காலத்துல எறாலுங்குறது ஏழைபாழைக சாப்புடுறதாம். விருந்துல எறா வெச்சா அவங்க வசதி கொறஞ்சவங்கன்னு தெரிஞ்சிக்கிறலாமாம். ஆனா இன்னைக்கு எறா வெல எகிறிப் போயி...நெலம தலைகீழ். எறா விருந்து வெச்சா...அவங்க வசதி நெறஞ்சவங்கன்னு தெரிஞ்சிக்கலாம்.<br /><br />சரி. நம்ம எறாவுக்கு வருவோம். எறா வெந்திருச்சுன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது? நல்ல நீளமா இருக்குற எறாக்கள் வடைவடையாச் சுருண்டுக்கிரும். அப்படி நல்லாச் சுருண்டு தண்ணியெல்லாம் வத்துனப்புறமா அடுப்ப அணைச்சிற வேண்டியதுதான். ஒருவேளை வேகுறப்போ தண்ணி விடலைன்னா கொஞ்சமாச் சேத்து வேக விடுங்க. நல்லா வடைவடையாச் சுருண்டதும் தண்ணி வத்தப் பெரட்டீட்டு எறக்கீருங்க. கடைசி வரைக்கும் தீ மெதமாத்தான் இருக்கனும்.<br /><br />இந்த எறாவ சோத்துல பெணஞ்சுக்கலாம். இட்டிலி தோசை சப்பாத்திக்குத் தொட்டுக்கலாம். பூரிக்கும் பெரமாதமா இருக்கும். எப்படியிருக்கும்னு தெரிய வேண்டாமா? அதுக்காகத்தான படம் போட்டிருக்கேன் கீழ.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZyXGrNQ06rP2Jpel9R4gTpCXV334iaWfWlgM0blxDq3-_sZmBy4ohq4B4o1IikNIdpm4-Y7qywWJcyvg2sMrEM_J2wQdEAxRPJZ6I6dSSUA8yF6fVdJALr2Jq_XOLMcxk9bhEVw/s1600-h/KudaiMilagaiIral-2.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZyXGrNQ06rP2Jpel9R4gTpCXV334iaWfWlgM0blxDq3-_sZmBy4ohq4B4o1IikNIdpm4-Y7qywWJcyvg2sMrEM_J2wQdEAxRPJZ6I6dSSUA8yF6fVdJALr2Jq_XOLMcxk9bhEVw/s400/KudaiMilagaiIral-2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5100152064609587362" /></a><br /><br />சுவையுடன்,<br />கோ.இராகவன்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-19476218.post-1159005492870754012006-09-23T02:51:00.000-07:002006-09-27T02:00:53.890-07:008. முட்டைக்கோஸ் ஓட்ஸ் உப்புமா"இன்னைக்கு என்ன செய்யப் போற?" ராத்திரிக்கு என்னன்னு கேக்குறாராம் மயிலாரு.<br /><br />"இன்னைக்கா....கறியெடுத்து கொழம்பு வெக்கனும். கோழியடிச்சி வறுவலு. மீன்...நல்ல நெய் மீனாவோ ரொகுவோ கிடைச்சா அதையும் பக்குவம் செய்யனும்..." பின்னே வேலைய முடிச்சிட்டு அலுத்துப் புலுத்து வர்ரவன் கிட்ட கேக்குற கேள்வியா.<br /><br />"அடப்பாவி...இத்தன தின்னா குண்டாயிருவ.....பேசாம சத்துள்ளதா ஏதாவது செஞ்சுரு"<br /><br />"சத்துள்ளதுன்னா? தின்னா சதை போடக்கூடாது. கொழுப்பு ஏறக்கூடாது. சர்க்கரச் சத்து வரக்கூடாது. அதான நீங்க சொல்றது?"<br /><br />ஒரு கண்ணை மட்டும் திறந்து என்னைப் பார்த்தார் மயிலார். "ஆமா...அதேதான்." வெடுக்குன்னு சொன்னார்.<br /><br />"சரி...அதையே செஞ்சிருவோம். ஆனா அதைச் செய்றது எப்படீன்னு நீங்களே சொன்னா நல்லாயிருக்கும்........" இழுத்தேன். சொல்றது எல்லாருக்கும் லேசு. ஆனா செய்றது. ஆகையால அவரையே கேட்டுட்டேன். ஆனா அவரு பாக்குறதப் பாத்தா அசந்து போற மாதிரித் தெரியலை.<br /><br />"ஓட்ஸ் உப்புமா சாப்பிடுறையா? ஓட்ஸ் நல்லது." ஏதோ புதுப் பேர எடுத்து விட்டாரு மயிலாரு. இதுக்குன்னே அகராதி (ரெண்டு பொருள்ளயும் எடுத்துக் கோங்க) இருக்கும் போல.<br /><br />"ஓட்ஸா? இங்கிலீஷ் கதைகள்ள குதிரைக்குக் குடுக்குறாங்களே! அதா? அது ஏதோ புல் வகையாமே! புலி பசிச்சாலும் புல்லைத் திங்காது தெரியுமா? நாங்கள்ளாம்..."<br /><br />"நிறுத்து..ரொம்பப் பேசாத. வீட்டுக்குள்ளயே உக்காந்து மூனு வேளையும் மூக்கப் பிடிக்கத் தின்னுக்குட்டு நீர்யான மாதிரி இருக்க. புலியாம் புலி. ஓட்ஸ் உப்புமாதான் செய்யனும் இன்னைக்கு" அவரே முடிவெடுத்தாச்சு. இனி என்னத்த மாத்துறது. "சரி. சொல்லுங்க."<br /><br />"வெங்காயம் இருக்கா? எடுத்துப் பொடிப் பொடியா நறுக்கிக்க."<br /><br />"நறுக்கியாச்சு"<br /><br />"பச்சமெளகா இருக்கா? எடுத்து நடுவுல கீறிக்க"<br /><br />"கீறியாச்சு"<br /><br />"கருவேப்பிலை இருக்கா? உருவி வெச்சுக்க"<br /><br />"உருவியாச்சு"<br /><br />"முட்டைக்கோசப் பொடிப் பொடியா நறுக்கிக்க"<br /><br />"நறுக்கியாச்சு"<br /><br />"ஓட்ஸ் எடுத்து ஒரு கிண்ணத்துல வெச்சுக்க"<br /><br />"வெச்சாச்சு"<br /><br />"இப்ப அடுப்புல சட்டிய வெச்சி காய வை"<br /><br />"வெச்சாச்சு"<br /><br />"அதுல நல்லெண்ணய ஊத்திக் காஞ்சதும் கடுகு உளுந்தம் பருப்பு போடு"<br /><br />"போட்டாச்சு"<br /><br />"கடுகு உளுந்தப் பருப்பு வெடிச்சதும் கருவேப்பிலை வெங்காயம் பச்சமெளகாயப் போட்டு வதக்கு"<br /><br />"வதக்கியாச்சு."<br /><br />"லேசா மஞ்சப் பொடியத் தூவு"<br /><br />"தூவியாச்சு"<br /><br />"நறுக்கி வெச்ச முட்டைக்கோச அதுல போட்டுக் கூட்டணியாக்கு"<br /><br />"ஆக்கியாச்சு"<br /><br />"கிண்ணத்துல இருக்குற ஓட்ஸ அதுல போட்டுக் கிண்டு"<br /><br />"கிண்டியாச்சு"<br /><br />"ஒன்னரக் கிண்ணம் தண்ணிய ஊத்திக் கெளறு"<br /><br />"கெளறியாச்சு"<br /><br />"தேவையான அளவு உப்புப் போட்டு வேகவிடு"<br /><br />"விட்டாசு"<br /><br />"கெட்டியானதும் அடுப்ப அணைச்சுரு"<br /><br />"அணைச்சாச்சு"<br /><br />"சட்டியில இருக்குற எடுத்து தலைல போட்டுக்கோ"<br /><br />"போட்.....அட என்னங்க இது....தலையில போடச் சொல்றீங்க?"<br /><br />"பின்னே ஒன்ன வெச்சி என்ன பண்றதாம்!... சரி சொன்னதச் செஞ்சியா?"<br /><br />"செஞ்சாச்சே. ஆனா இது ரவைல செய்ற உப்புமா மாதிரி உதிரியா இல்லையே." லேசாக் கொழகொழப்பா இருக்குற மாதிரி ஒரு எண்ணம்....புதுசாச் செய்றோம்ல.<br /><br />மயிலார் படக்குன்னு சொன்னாரு. "ரவையில ஒரு சத்தும் கெடையாது. ஒதுல நார்ச்சத்து மொதக்கொண்டு எல்லாம் இருக்கு. கொழுப்பு கெடையாது. சர்க்கரைச் சத்தும் கொறைச்சல். ஒடம்ப மெலிய வைக்கும். அதுனால உதிரி உதிரியா இல்லைன்னாலும் சாப்பிடு. தொண்டைக்குள்ள பட்டுக்கிறாது. இதுக்குத் தயிரும் கொஞ்சமே கொஞ்சமா ஊறுகாயும் வெச்சுக்க. நல்லாயிருக்கும்" விட்டாக் கொத்தீருவாரு போல. மயிலார் சொன்ன மாதிரியே செஞ்ச ஓட்ஸ் உப்புமாவை தட்டுல போட்டு தயிரும் ஊறுகாயும் போட்டு வெச்சிருக்கேன். கை தவறி ஊறுகா நெறைய விழுந்திருச்சு. நீங்க கொஞ்சமா போட்டுக்குங்க. இத நான் சாப்பிட்டிருவேன். ஆகையால நீங்க செஞ்சிச் சாப்பிடுங்க. சரியா?<br /><br /><br /><a href="http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/Oats-Uppuma-2.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/2224/1103/320/Oats-Uppuma-2.jpg" border="0" /></a><br /><br />அன்புடன்,<br />கோ.இராகவன்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-19476218.post-1140061371758596332006-02-15T19:41:00.000-08:002006-08-18T15:01:33.046-07:00உக்கரை மேலொரு அக்கறைஉக்கரை தெரியுமா உங்களுக்கு? செட்டிநாட்டுச் சட்டிகளையும் ஐயர் வீட்டு அடுப்புகளையும் கேட்டால் தெரியும் உக்கரையின் பெருமை.<br /><br />உருவத்தையும் சுவையையும் வைத்துப் பார்த்தால் புட்டப்பனுக்கும் கேசரியம்மாளுக்கும் பிறந்த குழந்தை என்று தெரிகிறது. மெத்து மெத்தென்று புட்டுப் போல உதிரி உதிரியாக இருக்கும். கேசரிக்கும் கொஞ்சம் அடர்ந்த நிறத்தில் இருக்கும் உக்கரையை கொஞ்சமாக மூன்று விரல்களால் கிள்ளி வாயில் போட்டால்....அடடா!<br /><br />உக்கரை விஷயத்தில் மட்டும் யாகாவாராயினும் நாகாக்கக் கூடாது. விவேகாநந்தரின் வாயில் ராமகிருஷ்ணர் வெல்லக் கட்டியை வைத்தாராம். அரைமணி நேரம் கழித்து வாயைத் திறக்கச் சொன்னால் முழு வெல்லக் கட்டி அப்படியே இருந்ததாம். வெல்லக் கட்டிக்குப் பதிலாக கொஞ்சம் உக்கரையை வைத்தால் விவேகாநந்தர் தோற்றிருப்பார் என்பதில் ஐயமேயில்லை.<br /><br />லட்டு, பூந்தி, அல்வா போல இது தித்திப்பு மிகுந்த பண்டமும் அல்ல. ஆனால் இனிப்புப் பண்டம். அளவான இனிப்பு. அதனால்தான் கிள்ளித் தின்பதை விட அள்ளித் தின்பது பெருஞ் சுகம். இனிப்புப் பண்டங்களைக் கொஞ்சம் அதிகமாக தின்றுவிட்டால் திகட்டும். அந்தப் பேச்சே உக்கரையிடம் கிடையாது. நாக்குக்கு ரொம்பவும் அக்கறையாக இருப்பதால் இன்னொரு கரண்டி என்றுதான் கேட்கச் சொல்லும்.<br /><br />தோள் கண்டார் தோளே கண்டார். இது கம்பன் வாக்கு. உக்கரை உண்டார் உக்கரையே உண்டார். இது இந்த வம்பன் நாக்கு...அல்லது வாக்கு.<br />இவ்வளவு சொல்லியாகி விட்டது. உக்கரையைச் செய்வது எப்படி என்று சொல்ல வேண்டுமே! நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது அடியேனுடைய விருப்பம். மேலும் உக்கரையின் மகிமையை எடுத்துச் சொல்லி அதன் புகழைப் பரப்பினால் பிறவிப் பெருங்கடலில் இக்கரையிலும் அக்கரையிலும் உக்கரைக் கரையாகக் கொடுப்பான் என்று உக்கரையாகப் பரணியில் சொல்லியிருக்கின்றது.<br /><br />பச்சரிசியும் தோல் நீக்கிய பாசிப்பருப்பும் சரிக்குச் சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலிருந்து உக்கரையின் சமதர்ம எண்ணம் நமக்குத் தெளிவாக விளங்குகிறது.<br /><br />இரண்டையும் தனித்தனியாக நன்றாக நீரில் கழுவி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். நன்றாக உலர்ந்த பிறகு வெற்று வாணலியில் இளஞ்சூட்டில் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இங்குதான் கவனமாக இருக்க வேண்டும். வறுக்கிறேன் என்று கருக்கி விடக் கூடாது. தெரிகிறதா. இதமாகவும் பதமாகவும் பச்சை வாடை போக வறுத்தால் போதும். ரொம்பவும் வறுத்த அரிசையையும் பருப்பையும் போட்டால் நாக்கை வருத்தத்தான் பண்டம் கிடைக்கும். உக்கரை கிடைக்காது.<br /><br />வறுத்தவைகளை ஆற வைத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். மிக்சி இருப்பவர்கள் மிக்சியில். கல்லுரலும் உலக்கையும் இருப்பவர்கள் அதிலேயே இடித்துக் கொள்ளலாம்.<br /><br />இட்டிலிக் கொப்பரையில் இட்டிலி மாவிற்கு பதிலாக இந்த மாவை வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். புட்டுக்கு வேக வைப்பது போல. ஆனால் நீர் ஊற்றிப் பிசையக் கூடாது. உலர்ந்த மாவை அப்படியே வேகவைக்க வேண்டும்.<br /><br />வெந்த மாவை நன்றாக உதிர்த்து ஆற வைத்துக் கொள்ளவும். வெல்லப் பாகை காய்ச்சி, நன்றாக காய்ந்து வரும் பொழுது வெந்த மாவை அதனோடு சேர்த்துக் கிளற வேண்டும். மாவு குறைவாகப் போனால் கொளகொளவென கேசரி போல ஆகிவிடும். கிளறும் பொழுதும் மாவு உதிரியாக இருக்க வேண்டும். வெல்லப் பாகும் மாவும் கலந்து நன்றாக உதிரியாக இருக்கையில் லேசாக நெய் விட்டு ஏலக்காய்ப் பொடி தூவி இறக்கி வைக்கவும். சுவையான உக்கரை தயார்.<br /><br />உக்கரையைச் சுடச்சுடச் சாப்பிடக் கூடாது. ஆறிய பிறகு தட்டில் வைத்து கையால் எடுத்துச் சாப்பிட வேண்டும். ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டால் உக்கரையின் மெத்துமை கைகளுக்குத் தெரியாமல் போய்விடும். அழுத்தி எடுக்கக் கூடாது. பஞ்சுமிட்டாயைப் பதமாகப் பிய்க்கிற மாதிரி தனக்கு வலிக்குமோ உக்கரைக்கு வலிக்குமோ என்று எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.<br /><br />உக்கரையின் சுவையை உண்டர் விண்டிலர். விண்டவர் உண்டிலர் என்பதே உண்மை. நீங்களும் உக்கரையினை அக்கறையோடு செய்து உண்டு அதன் பலன்களை உக்கரையாகப் பரணியில் சொல்லியிருக்கும்படி அடைந்து வாழுமாறு கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />அன்புடன்,<br />கோ.இராகவன்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-19476218.post-1138639930425555992006-01-30T08:37:00.000-08:002006-02-15T05:13:37.386-08:00ஹிண்டி மொசுரு<span style="color:#990000;">இதென்னடா பேருன்னு பாக்குறீங்களா! அது ஒரு சுவையான விஷயம். இது வடகர்நாடக மக்கள் விரும்பும் ஒரு உணவு. எனக்கும் பெங்களூர் வந்தப்புறம் மிகவும் பிடிச்சுப் போன உணவு. ஆகையால இதப் பத்தி ஒங்களுக்கெல்லாம் சொல்லலாமுன்னு பாக்குறேன். சொல்றத ஒழுங்கா குறிச்சி வெச்சுக்கிட்டு செஞ்சு பாருங்க.</span><br /><span style="color:#990000;"></span><br /><span style="color:#990000;">ஹிண்டி மொசுருக்குப் போறதுக்கு முன்னாடி ஈருள்ளிச் சப்பாத்தியப் பாப்போம். ஏன்னா. ஹிண்டி மொசுரத் தொட்டுக்கிட்டுதான் ஈருள்ளிச் சப்பாத்தியச் சாப்பிடனும்.</span><br /><span style="color:#990000;"></span><br /><span style="color:#990000;">வடக்கு கர்நாடகா, அதாவது பிஜாப்பூர் சுத்து வட்டாரம். கொஞ்சம் வறண்ட பிரதேசம். மராட்டியும் கன்னடமும் கலந்த கலாச்சாரம். அங்க சோறெல்லாம் கெடைக்காது. சோளமும் கோதுமையும்தான்.</span><br /><br /><span style="color:#990000;">சோளத்தை ஜோளம்-ன்னு சொல்வாங்க. கோதுமைய கோதின்னு சொல்வாங்க. அவங்க ஊருல ஜோளத ரொட்டி (சோள ரொட்டி) ரொம்பப் பிரபலம். சுட்டு வெச்சு அதக் காய வெச்சிக்கிருவாங்க. காஞ்சதும் கடக்மொடக்குன்னு இருக்கும். அந்த ரொட்டிக்கே கடக் ரொட்டீன்னுதான் பேரு. அத ஹிண்டி மொசுருல தொட்டுக்கிட்டு ருசிச்சி ருசிச்சிச் சாப்பிடுவாங்க.</span><br /><span style="color:#990000;"></span><br /><span style="color:#990000;">நம்ம ஜோளத ரொட்டியை விட்டுட்டு ஈருள்ளிச் சப்பாத்தியைப் பார்ப்போம். நம்ம செய்யுற சப்பாத்தி போலதான். ஆனா வெங்காயத்த இடிச்சுச் சாறெடுத்து அதச் சப்பாத்தி மாவுல கலந்துருவாங்க. இப்ப மிக்சர் இருக்குறதால வெங்காயத்தை நல்லா அரைச்சு சப்பாத்தி மாவுல பெசஞ்சு கலந்துருவாங்க. அதச் சப்பாத்தி போட்டா அதுதான் ஈருள்ளிச் சப்பாத்தி. அங்க வெயில் நெறைய. அதனால குளிர்ச்சிக்கு வெங்காயத்தை இப்படி சேத்துக்குவாங்க.</span><br /><span style="color:#990000;"></span><br /><span style="color:#990000;">இப்ப ஈருள்ளி சப்பாத்தி தயார். ஹிண்டி மொசுருதான் மிச்சம். இதுல மொசுருன்னா தயிர். அவ்வளவுதான். ஆகையால நாம இப்பப் பாக்க வேண்டியது ஹிண்டி மட்டும்தான்.</span><br /><span style="color:#990000;"></span><br /><span style="color:#990000;">நிலக்கடலப் பருப்பை எண்ணெய்யில்லாம நல்லா வறுத்து, தோல உரிச்சுக்கணும். அத்தோட பூண்டுப் பற்கள், கொஞ்சம் கல்லுப்பு, தேவையான அளவு மெளகாத்தூள் போட்டு இடிச்சு வெச்சுக்கோங்க. மிக்சர் இருந்தா எதக்கலும் கொதக்கலுமா அரைச்சு வெச்சுக்கோங்க. ஹிண்டி தயார். அங்கெல்லாம் உறப்பு நல்லா சாப்பிடுவாங்க. ஆகையால நெறைய மொளகாப்பொடி போடுவாங்க. நமக்குத் தேவைக்கு நம்ம போட்டுக்கலாம். பச்சைப் பூண்டு பிடிக்காதவங்க பூண்டுப் பற்கள எண்ணெயில்லாம வதங்கியும் போடலாம்.</span><br /><span style="color:#990000;"></span><br /><span style="color:#990000;">ஈருள்ளிச் சப்பாதிய தட்டுல போட்டுக்கோங்க. ஹிண்டிய தட்டுல பொடி போட்டுக்கிற மாதிரி போட்டுக்கிட்டு அதுல மொசுர (தயிர) ஊத்திக் குழப்புங்க. குழப்புன விரல சும்மா விடாதீங்க. அப்புறம் சப்பாத்தியத் தொட்டுச் சாப்பிட்டுப் பாருங்க...........அடடா! என்ன அருமை! என்ன அருமை!</span><br /><span style="color:#990000;"></span><br /><span style="color:#990000;">தயிர்ச்சோறு சாப்பிடும் போது அதுல கொஞ்சம் ஹிண்டியத் தூவிக்கிட்டா பிரமாதமா இருக்கும். தோசைக்கும் இந்த ஹிண்டி மொசுரு நல்லாயிருக்கும். செஞ்சு பாத்துட்டுச் சொல்லுங்க. அப்புறம் நீங்களும் ஹிண்டி மொசுரு விசிறிதான்.</span><br /><span style="color:#990000;"></span><br /><span style="color:#990000;">அன்புடன்,</span><br /><span style="color:#990000;">கோ.இராகவன்<br /></span><br /><span style="color:#990000;"><br /></span><span style="color:#990000;"></span><br /><a href="http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/Hindi.jpg"><img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/2224/1103/320/Hindi.jpg" border="0" /></a>நமது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தப் புகைப்படத்தை இங்க போடுறேன். வெப்காமிராவுல எடுத்ததால தெளிவா இல்லை. படத்துல பாக்குறது ஹிண்டி. இதுலதான் மொசுரு (தயிர்) கலந்து சாப்பிடனும்.G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-19476218.post-1136192113262250002006-01-02T00:53:00.000-08:002006-01-02T00:55:13.273-08:00முழுநெல்லி பிசைஞ்ச ஊறுகாய்<span style="color:#cc0000;">தேவையான பொருட்கள்<br />முழுநெல்லிக்காய் - வேண்டிய அளவு<br />மிளகாய்த் தூள் - அளவிற்கேற்ப<br />மஞ்சள் தூள் - சிறிதளவு<br />உப்பு - சுவைக்கேற்ப<br />நல்லெண்ணெய் - வேண்டிய அளவு<br /><br />செய்முறை<br />1. நெல்லிக்காயை நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.<br />2. சிறிதளவே தண்ணீர் விட்டு, அதில் மஞ்சப்பொடியும் போட்டு, நெல்லிக்காய்களை ஆவியில் நன்றாக வேகவிடவும். வேகும் பொழுது அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.<br />3. வெந்த பிறகு நெல்லிக்காய்களை எடுத்து ஆறவைக்கவும்.<br />4. ஆறிய நெல்லிக்காய்களைப் பிதுக்கினால் சதையும் கொட்டையும் தனித்தனியாக வந்துவிடும்.<br />5. சதைப்பற்றை மட்டும் எடுத்துக் கொண்டு லேசாகப் பிசையவும். கஞ்சியாகவும் பிசையக் கூடாது. முழுசாகவும் விட்டு விடக்கூடாது. இரண்டும் கலந்தாற்போல இருக்க வேண்டும்.<br />6. அடுப்பில் வாணலியைக் காய வைத்து எண்ணெய் விடவும்.<br />7. கடுகு உளுந்தம் பருப்பு போட்டு வெடித்ததும், கருவேப்பிலைகளைப் போடவும்.<br />8. பெருங்காயமும் மிளகாய்த்தூளும் தேவையான உப்பும் கலந்து எண்ணெய்யில் போடவும்.<br />9. உடனேயே நெல்லிகாய் பிசையலைப் போட்டு நன்றாகக் கிண்டவும்.<br />10. பார்ப்பதற்கு அல்வா பதத்திற்கு வந்ததும் சட்டியை இறக்கி வைக்கவும்.<br />11. அருமையான நெல்லிக்காய் பிசைஞ்ச ஊறுகாய் தயார். தயிர்ச்சோறு, தோசை, இட்டிலி வகைகளுக்கு நன்றாக இருக்கும்.</span><br /><span style="color:#cc0000;"></span><br /><span style="color:#cc0000;">அன்புடன்,</span><br /><span style="color:#cc0000;">கோ.இராகவன்</span>G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-19476218.post-1133948826929984962005-12-07T01:45:00.000-08:002006-03-21T20:29:17.266-08:00முருங்கைக் கீரை அடைகீரைகளில் இரும்புச் சத்து நிறைந்தது முருங்கைக் கீரை. உணவில் பயன்படுத்துவது மிகவும் நன்று. முருங்கைக் கீரை அடை செய்ய எளிமையான வண்ணமயமான அடை.<br /><br />தேவையான பொருட்கள்<br />முருங்கைக் கீரை - ஒன்றரை பங்கு (கட்டின் அளவு ஊருருக்கு வேறுபடும். ஆகவே தேவையான அளவு).<br />துவரம் பருப்பு - ஒரு பங்கு<br />கடலைப் பருப்பு - ஒரு பங்கு<br />உளுந்தம் பருப்பு - கால் பங்கு<br />பச்சரிசி - அரைக்கால் பங்கு<br />வெங்காயம் - பெரியது ஒன்று<br />பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப<br />ஜீரகம் - சிறிதளவு<br />உப்பு - தேவையான அளவு<br />எண்ணெய் - தேவையான அளவு<br /><br />செய்முறை<br /><br />1. பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஊறப் போடவும். வெந்தயத்தையும் கூடச் சேர்க்கவும்.<br /><br />2. முருங்கைக் கீரையை இலையிலையாக ஆய்ந்து அலசிக் கொள்ளவும்.<br /><br />3. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.<br /><br />4. ஊறிய பருப்பு, நறுக்கிய வெங்காயம், காம்பு நீக்கிய மிளகாய், ஆய்ந்து அலவிய கீரை, ஜீரகம், உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். நல்ல மைப்பதத்துக்கும் அரைக்கலாம். எதக்கலும் குதக்கலுமாகவும் அரைக்கலாம்.<br /><br />5. அரைத்த மாவு சற்றே பச்சை நிறத்தில் இருக்கும். அந்த மாவில் தோசை ஊற்றுவது போல சுட்டு எடுக்கவும். சுடச்சுட முருங்கைக் கீரை அடை தயார்.<br /><br />இதை வெல்லம், வெங்காய்த் துவையல், தக்காளித் துவையலோடு சேர்த்துச் சாப்பிட சுவை கூடும். முருங்கைக் கீரை கிடைக்காத வேளைகளில் பொன்னாங்கன்னிக் கீரையையும் அரைக்கீரை, தண்டுக்கீரை போன்றவைகளையும் பயன்படுத்தலாம். பருப்பு நிறைய இருப்பதால் புரதச் சத்து நிறைந்த உணவு இது. பச்சை அடை என்று சொல்லியும் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.<br /><br />அன்புடன்,<br />கோ.இராகவன்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-19476218.post-1133434717582187092005-12-01T02:58:00.000-08:002005-12-29T11:43:32.486-08:00நெல்லிக்காய் ஜாமூன்தேவையான பொருட்கள்<br />அரை நெல்லிகாய்<br />ஜீனி - தேவையான அளவு<br />ஏலக்காய் பொடித்தது - சிறிதளவு<br /><br />செய்முறை<br />1. ஜீனியை நீரில் கரைத்து பாகு காய விடவும். சற்று நீர்க்க இருக்க வேண்டும்.<br />2. கழுவிய அரைநெல்லிக்காய்களை ஜீனிப்பாகில் போட்டு வேகவிடவும்.<br />3. நெல்லிக்காய்கள் வெந்ததும் ஏலம் போட்டு இறக்கவும்.<br />4. அருமையான நெல்லிகாய் ஜாமூன் தயார். அப்படியே தின்னலாம். புளிப்பும் இனிப்பும் கலந்து பிரமாதமாக இருக்கும்.<br /><br />அன்புடன்,<br />கோ.இராகவன்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-19476218.post-1133434587430097082005-12-01T01:30:00.000-08:002005-12-29T11:43:49.826-08:00பீர்க்கங்காய் துவையல்<span style="color:#990000;">பீர்க்கங்காய் - ஒன்று (இளசு, சிறியது).<br />பொரிகடலை (பொட்டுக்கடலை) - 50 கிராம்<br />சின்ன வெங்காயம் - 12<br />பச்சை மிளகாய் - 4-5 (உறைப்பிற்கேற்ப கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம்)<br />புளி - ஒரு சின்ன வெங்காய அளவு<br />ஜீரகம் - இரண்டு தேக்கரண்டி<br />வெந்தயம் - சிறிதளவு<br />பெருங்காயம் - சிறிதளவு<br />உப்பு - தேவையான அளவு<br />எண்ணெய் - சிறிதளவு<br /><br />1. பீர்க்கங்காயை கழுவி தோலோடு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.<br /><br />2. சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும்<br /><br />3. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயமும் ஜீரகமும் போடவும்.<br /><br />4. வெந்தயமும் ஜீரகமும் நன்றாகப் பொரியும் வேளையில் வெங்காயத்தைச் சேர்க்கவும்.<br /><br />5. வெங்காயம் சற்று வெந்ததும் பீர்க்கங்காய் துண்டுகளையும் புளியையும் சேர்க்கவும். சற்று அதிகமாக சேர்த்துக் கொண்டால் புளிப்பு நன்றாக கலந்து வரும்.<br /><br />6. பீர்க்கங்காய் வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.<br /><br />7. ஆறிய பீர்க்கங்காய் கலவை, பச்சை மிளகாய், பொரிகடலை, உப்பு ஆகியவறைச் சேர்த்து அரைக்கவும். பீர்க்கங்காய் துவையல் தயார்.<br /><br />அரைக்கும் பொழுது முதலில் தண்ணீர் சேர்க்கக் கூடாது. தேவைப்பட்டால் மட்டுமே சேர்க்க வேண்டும். ஏனென்றால் பீர்க்கங்காயில் தண்ணீர் இருக்கும். இந்தத் துவையல் ரசஞ் சோற்றுக்கு மிகவும் சிறந்த துணை. புளிப்பைக் கூட்டினால் இட்டிலி தோசைக்கும் நன்றாக இருக்கும். நல்லெண்ணெய் சேர்த்து சோற்றோடு பிசைந்து தின்னவும் ருசிக்கும்<br /><br />அன்புடன்,<br />கோ.இராகவன்</span>G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-19476218.post-1133429242819232372005-12-01T01:06:00.000-08:002005-12-29T11:44:15.553-08:00கோதுமை ரவை கதம்பம்கதம்ப சாதம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுவும் அது போலத்தான். கலந்த வகைகள் செய்தால் இதையும் செய்யலாம்.<br /><br />கோதுமை ரவை - ஒரு கப்<br />பாசிப் பருப்பு - முக்கால் கப் (தோலுரித்து உடைத்தது)<br />பீர்க்கங்காய் - இரண்டு<br />வெங்காயம் - ஒன்று (பெரியது)<br />தக்காளி - இரண்டு (பெரியது)<br />பச்சை மிளகாய் - ஒன்று (நீளமானது)<br />சாம்பார் பொடி - தேவையான அளவு<br />மள்சள் பொடி - சிறிதளவு<br />எண்ணெய் - தேவையான அளவு<br />கொத்துமல்லி இலை - சிறிதளவு. தூளாக நறுக்கியது. (மேலே தூவ)<br />உப்பு - தேவையான அளவு<br /><br />1. பீர்க்கங்காயை தோல் நீக்கி, சற்று பெரிய வட்ட வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.<br /><br />2. வெங்காயத்தையும் தக்காளியையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.<br /><br />3. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு போடவும். வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். சிறிது மஞ்சள் தூளைச் சேர்க்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.<br /><br />4. அத்தோடு தேவையான அளவு சாம்பார் பொடியும் உப்பும் கலக்கவும்.<br /><br />5. கலந்தபின் பீர்க்கங்காய் துண்டுகளைச் சேர்க்கவும். லேசாக இரண்டு முறை புரட்டி விட்டு கோதுமை ரவையையும் பாசிப் பருப்பையும் சேர்க்கவும்.<br /><br />6. ஒன்றுக்கு ஒன்றே முக்கால் அல்லது இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்.<br /><br />7. இரண்டு மூன்று விசில்களுக்கு விடுங்கள். ஆவி போனதும் (குக்கரில், செய்கிறவர் ஆவியல்ல) திறந்து மல்லித்தூள் தூவி பரிமாறவும்.<br /><br />புதுமையாகவும் நன்றாகவும் இருக்கும். பரிமாறுகையில் மேலாக நல்லெண்ணெய் விட்டுக்கொள்ளலாம். பீர்க்கங்காயிற்கு மாற்றாக வேறு காய்கறிகளும் போட்டு முயன்று பார்க்கலாம். ஆனால் பீர்க்கங்காய்தான் மிகவும் சிறப்பு. பீட்ரூட் கலக்கலாம். கதம்பம் சற்று சிவப்பாகவும் இருக்கும். பூசணிக்காயும் நன்றாக இருக்கும்.<br /><br />தொட்டுக்கொள்ள வடகம் சிப்ஸ் ஆம்லெட் போன்றவை நன்றாக இருக்கும்.<br /><br />இந்தக் கதம்பத்தின் சிறப்பம்சமே இதை சர்க்கரை நோயாளிகளும் யோசிக்காமல் வெட்டலாம். அரிசி அறவே கிடையாது. ஆனால் சுவையும் அபாரம்.<br /><br />அன்புடன்,<br />கோ.இராகவன்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com10